|
| தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு |
| சென்னை (ஏஜென்சி), 8 செப்டம்பர் 2008 ( 16:07 IST ) | |
ஜாமீனில் விடுதலை வழங்குவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கண்டித்து இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.
மதுரையில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை கூடிய வழக்கறிஞர்கள் கோஷங்கள் எழுப்பியபடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால், நீதிமன்ற பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டன.
இந்த புறக்கணிப்பு போராட்டம் காரணமாக, அந்நீதிமன்ற வளாகத்தைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
அதேநேரத்தில், இப்போராட்டத்தில் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கறிஞர்கள் கலந்து கொள்ளாததால், அங்கு நீதிமன்ற பணிகளில் எவ்வித பாதிப்பும் இல்லை.
ஆயினும், திருநெல்வேலி, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, விருதுநகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குற்றம்சாட்டப்பட்டவர் தனக்கு ஜாமீன் பெற, தனது ஜாமீன் பத்திரத்தை நீதிபதிகளுக்கு பதிலாக காவல்துறை அதிகாரிகளிடம் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவு ஒன்றை பிறப்பித்ததை எதிர்த்தே, இப்போராட்டம் நடத்தப்பட்டது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு... |
| |
|
|
|
|
 | | | ஜெயம் கொண்டான் | | வம்பை கண்டால் வளைந்து போகும் வினய், சாமான்யர்கள் சார்பாக தாதாவிடம் 'பன்ச்' வசனம் பேசி இறுதியில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - வயதான தம்பதியருக்கு (பெற்றோர்களுக்கு) பிறக்கும் குழந்தைகளுக்கு, பைபோபர் குறைபாடு என்றழைக்கப்படும் மனநல பாதிப்பு... |
| |
|
|
|
|
|
|
|