|
| மதுரையில் அதிமுகவினர் மறியல் : 1,000 பேர் கைது |
| மதுரை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 8 செப்டம்பர் 2008 ( 13:28 IST ) | |
மதுரை - மேலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுகவைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை, காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலூரில் கூடுதலாக ரேஷன் கடைகள் அமைத்தல், கூடுதலாக பேருந்துகளை இயக்குதல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரி, அதிமுகவினர் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலூரைச் சுற்றியுள்ள கிராமங்களுக்குச் செல்லும் பேருந்துகள் பலவற்றை ரத்து செய்ததைக் கண்டித்தும் அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதையடுத்து, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.சாமி உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு... |
| |
|
|
|
|
 | | | ஜெயம் கொண்டான் | | வம்பை கண்டால் வளைந்து போகும் வினய், சாமான்யர்கள் சார்பாக தாதாவிடம் 'பன்ச்' வசனம் பேசி இறுதியில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - வயதான தம்பதியருக்கு (பெற்றோர்களுக்கு) பிறக்கும் குழந்தைகளுக்கு, பைபோபர் குறைபாடு என்றழைக்கப்படும் மனநல பாதிப்பு... |
| |
|
|
|
|
|
|
|