|
| 'ஆசிரியர் பணியே தெய்வீகத் தொழில்' |
| சென்னை (ஏஜென்சி), சனிக்கிழமை, 6 செப்டம்பர் 2008 ( 11:20 IST ) | |
உலகில் ஆசிரியர் பணியே தெய்வீகத் தொழில் ஆகும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
சென்னையில் தமிழக அரசின் சார்பில் நேற்று நடைபெற்ற ஆசிரியர் தினவிழாவில், மொத்தம் 363 ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை வழஙகி, பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், குழந்தைகளை புடம்போட்டு, மெருகேற்றி பிரகாசமாக அனுப்புவது ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள்தான். எனவே உலகில் ஆசிரியர் தொழில் தெய்வீகத் தொழில் ஆகும்," என்றார்.
இங்கே 363 பேருக்கு விருது வழங்கப்படுகிறது என்ற அவர், "எல்லா ஆசிரியர்களும் நல்லாசிரியர்கள்தான். விருது கிடைக்காதவர்களுக்கு அடுத்த ஆண்டு நிச்சயம் கிடைக்கும். உங்கள் கல்வி மக்களை அடிப்படை கல்வி உடையவர்களாக மாற்றக்கூடியது. அமெரிக்காவில் சாப்ட்வேர் துறையில் இந்தியர்கள் அதிக அளவில் இருக்க நீங்கள்தான் காரணம்," என்றார்.
பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை வகித்த இவ்விழாவில், பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் ம.குற்றாலிங்கம், இயக்குனர் பெ.பெருமாள்சாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|