யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
கிறிஸ்தவர் இடஒதுக்கீட்டிற்கான ஐயப்பாடு நீங்கும் : கருணாநிதி
செ‌ன்னை(ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 5 செப்டம்பர் 2008   ( 18:31 IST )
த‌மிழக‌த்த‌ி‌ல் கிற‌ி‌ஸ்தவ‌ர்களு‌க்கு த‌னி இடஒது‌க்‌கீடு வழ‌ங்குவது தொடர்பாக எழுப்பப்பட்டுள்ள ஐய‌ப்பாடு ‌விரை‌வி‌ல் தெ‌ளிவா‌க்க‌ப்படும் என தமிழக முதலமை‌ச்ச‌ர் ருணா‌நி‌தி தெரிவித்துள்ளார்.

சென்னைப் பல்கலைக்கழக‌த்‌‌தி‌ன் 150-வது ஆண்டு நிறைவு விழா மற்றும் பட்டமளிப்பு விழாவில் கல‌ந்து கொ‌ண்டு கருணாநிதி பேசியதாவது:

இந்திய திருநாட்டின் மூத்த பல்கலைக் கழகங்களில் முதலாவதாக கொ‌ல்கத்தா பல்கலைக் கழகம், இரண்டாவதாக மு‌ம்பை பல்கலைக் கழகம், ஆகியவற்றை அடுத்து மூன்றாவது பல்கலைக் கழகமாக 5.9.1857 அன்று தொடங்கப்பட்ட பழமையான பல்கலைக்கழகம் இந்த சென்னைப் பல்கலைக் கழகம்.

சென்னை மாகாணத்தில் நீதிக் கட்சி அரசு நடைபெற்றபொழுது 1923 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட சென்னை பல்கலைக்கழகம் சட்டம் 1923 என்ற சட்டம் தான் சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு இன்று வரையிலும் உறுதிமிக்க சட்டமாக இருந்து வருகிறது. உயர்கல்விக்கு நீதிக் கட்சி அளித்த கொடை என்றே இச்சட்டம் அழைக்கப்பட்டு வருகிறது.

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் உயர்கல்வி பெறுவதற்கும், பல்கலைக் கழகத்தில் அவர்கள் ஆசிரியர்களாக இடம் பெறுவதற்கும் முதன்முதலில் நீதிக் கட்சி ஆட்சிதான் வழி வகுத்துக் கொடுத்தது என்பது சரித்திரத்தில் பொறிக்கப்பட்டுள்ள சான்றாகத் திகழ்கிறது.

மத்திய அரசுப் பணிகளிலும், கல்வி நிறுவனங்களிலும், பொதுத் துறை நிறுவனங்களிலும் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 ‌விழு‌க்காடு இட ஒதுக்கீடு வழங்கிட எதிர்ப்புகள் ஆர்ப்பரித்து எழுந்த போதும், அந்த எதிர்ப்புகளுக்கெல்லாம் அஞ்சாமல் இந்தியா முழுவது‌ம் வாழும் ஏழை எளிய ம‌க்க‌ளி‌ன் நலன் கருதி உச்ச நீதிமன்றத்தின் மூலம் அதனை நிலைநாட்டித் தந்துள்ள பெருமைக்குரிய சோனியா காந்தி‌க்கு‌ம், பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் தமிழக மக்களின் சார்பில் நன்றியையும், பாராட்டுகளையும் ‌மீ‌ண்‌டு‌ம் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் சிறுபான்மையினரான கிறித்தவர்களுக்கும்,முஸ்‌லிம்களுக்கும் நீதியரசர் ஜனார்த்தனம் கமிஷன் மூலம் தலா 3.5 ‌விழு‌க்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு, அதிலே கிறித்தவர்களுக்கு எழுந்துள்ள அய்யப்பாடும் விரைவில் தெளிவாக்கப்படவுள்ளது.அருந்ததியருக்கு தனி வாரியம் கண்டதோடு, தனி ஒதுக்கீடும் அளிப்பதற்கு அரசினால் அமைக்கப்பட்ட ஜனார்த்தனம் கமிஷனின் அறிக்கையை அரசு எதிர் பார்த்து இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பருவ மழை பெய்தால்தான் மின்தட்டுப்பாடு நீங்கும் : ‌வீராசா‌‌மி
சுயமரியாதை இருந்தால் மன்மோகன் பதவி விலக வேண்டும் : ஜெ
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு
சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர்கள் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
கல்வி : அரசியல்வாதிகளுக்கு பிரதமர் வலியுறுத்தல்
ஒரிசாவை போல் காஷ்மீர் இந்துவுக்கும் உதவி: ஜெ. கோரிக்கை
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சத்யம்
அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'! முதலமைச்சர் கனவில்...
குசேலன்
சுப்பிரமணியபுரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய...
மேலும் படிக்க|மேலும்...