|
| மதுரையில் கனமழை: அணைகள் நிரம்புகின்றன!
|
| மதுரை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 28 ஆகஸ்டு 2008 ( 16:18 IST ) | |
மதுரையில் பெய்த கனமழை காரணமாக அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
மதுரை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் நேற்றிரவு பலத்தமழை பெய்தது. இதனால் நகர் முழுவதும் வெள்ளக்காடானது. பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டது.
கனமழை காரணமாக மதுரை நகரில் 95.4 மி.மீ. மழையும், சாத்தையாறு அணையில் 105 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
இதன் காரணமாக, 136 அடி கொள்ளளவு கொண்ட பெரியார் அணையின் நீர்மட்டம் 126.60 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,434 கன அடியாகவும், அணையிலிருந்து வெளியேறும் நீரின் அளவு வினாடிக்கு 1,424 கன அடியாகவும் உள்ளது.
வைகை அணையின் நீர்மட்டம் 65.62 அடியாக (அதிகபட்ச கொள்ளவு 71 அடி) உயர்ந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2,111 கன அடியாகவும், வெளியேறும் நீரின் அளவு வினாடிக்கு 41 கன அடியாகவும் உள்ளது.
மதுரையின் சுற்றுப்புறப் பகுதிகளான மேட்டுப்பட்டி, ஆண்டிப்பட்டி, குப்பனாம்பட்டி, சோத்துப்பாறை அணை, பெரியார் அணை, வைகை அணை ஆகியவற்றிலும் கணிசமமான மழையளவு பதிவாகியுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|