|
| என் மீது பொய் குற்றச்சாட்டு : அமைச்சர் கே.பி.பி.சாமி |
| சென்னை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 28 ஆகஸ்டு 2008 ( 14:03 IST ) | |
நான் சிலரை மிரட்டியதாக வந்த செய்திகள் அனைத்தும் முற்றிலும் தவறானவை என்றும், அவையாயும் பொய்யான குற்றச்சாட்டுகள் என்றும் மீன்வளத் துறை அமைச்சர் கே.பி.பி.சாமி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
வி.எல்.தண்டபாணி என்பவரை நான் மிரட்டியதாக வெளிவந்துள்ள தகவல்கள் பொய்யானவை. வி.எல்.தண்டபாணி, குமார் ஆகியோர் யார் என்பது எனக்கு தெரியாது.
வி.எல்.தண்டபாணி என்பவரிடம் நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக வெளிவந்த தகவல்கள் முற்றிலும் தவறானவை.
இந்தச் செய்தியை படித்தவுடன், இவை பொய்யானவை என்று முதல்வர் கருணாநிதி, நிதியமைச்சர் க.அன்பழகன் மற்றும் திமுக தலைமைக் கழகத்திடம் விளக்கம் அளித்து இருக்கிறேன்.
என்னைப் பற்றி தவறான செய்தி வெளியிட்ட பத்திரிகை மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் சாமி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|