|
| தட்டுப்பாடின்றி டீசல் வினியோகம் : கம்யூ. வலியுறுத்தல் |
| சென்னை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 28 ஆகஸ்டு 2008 ( 14:02 IST ) | |
தமிழகத்தில் தட்டுப்பாடின்றி டீசல் கிடைக்க தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் என்.வரதராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
டீசல் தட்டுப்பாடு சென்னை மற்றும் சென்னையின் சுற்றுப்புறங்களிலும்,தமிழகம் முழுவதும் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
மத்திய அரசோ, எண்ணெய் நிறுவனங்களோ இந்த தட்டுப்பாடு நீங்க உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது.மத்திய, மாநில அரசின் விளக்கங்கள் பிரச்சனைக்கு தீர்வாக அமையவில்லை.
மாநில அரசு, மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியிருந்தும் இதுவரை பிரச்சனை தீர அவசர நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
எனவே மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் தமிழகத்தில் தட்டுப்பாடின்றி டீசல் கிடைக்க தேவையான அளவு டீசல் உடனடியாக வழங்கிட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனவும், மாநில அரசு அதனை உறுதிப்படுத்திட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது,என வரதராஜன் கூறியுள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|