|
| தேசிய பாதுகாப்பு சட்ட கைதை எதிர்த்து ஐகோர்ட்டில் குரு மனு |
| சென்னை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 22 ஜூலை 2008 ( 18:04 IST ) | |
தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ததை ரத்து செய்யக் கோரி, வன்னியர் சங்கத் தலைவர் 'காடுவெட்டி' குரு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், 'மாவட்ட அதிகாரிகளால் பிறப்பிக்கப்பட்ட கைது ஆணை, அதிகார துஷ்பிரயோகம். 2008-ம் ஆண்டு ஜனவரி 6-ம் தேதி, தான் ஒரு கட்சி அமைப்பில் பேசிய பேச்சின் அடிப்படையில் தன்னை கைது செய்ததற்கான பிண்ணனி அமைந்து இருப்பதால், இது ஒரு அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை. எனவே, இந்த கைதை ரத்து செய்யவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் டி.முருகேசன், எஸ்.பழனிவேலு அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வரவுள்ளது.
அதிமுக பிரமுகர் முருகேசனை தாக்கிய வழக்கு, வெடிகுண்டு வழக்கு, திமுக முக்கிய பிரமுகர்களை அவதூறாக பேசிய வழக்கில் வன்னிய சங்க தலைவரும், பாமக பொருளாளருமான 'காடுவெட்டி' குரு கைது செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் தமிழக அரசு கைது செய்தது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|