யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
க‌ச்ச‌த்‌தீவை ‌மீ‌ட்க வேறுபாடுகளை மறப்போம்: முதல்வர்
சென்னை (ஏஜென்சி), சனிக்கிழமை, 19 ஜூலை 2008   ( 15:10 IST )
''கச்சத்தீவை மீட்க, அரசியல் வேறுபாடுகளை கடந்து அனைவரும் ஒருமித்து குரல் எழுப்ப வேண்டும்'' எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினால் சுட்டுக்கொல்லப்படுவதை கண்டித்து திமுக சார்பில் மாநிலம் முழுவதும் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.

சென்னையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இ‌ன்று ‌உ‌ண்ணா‌விரத‌‌ப் போராட்டத்தை தொடங்கி வைத்து முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி பேசியதாவது:

இந்தியாவைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்று, திரும்பி வராமல் போவதற்கு இலங்கை ராணுவம் அவர்களை கொன்று குவிப்பதே காரணம். இதனை தடுத்து நிறுத்த நாம் எடுத்த முயற்சிகள் ஒன்று, இரண்டு அல்ல.

மீனவர்களுக்கு இன்றைக்கு ஏற்படுகின்ற தீமைகளுக்கு கச்சத் தீவை திமுக விட்டுக்கொடுத்தது தான் காரணம் என்று சிலர் தற்போது பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.

1974ம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திரா காந்தி ஒரு உடன்பாட்டின் மூலம் ‌இலங்கைக்கு கச்சத்தீவை விட்டுக்கொடுக்கும் முடிவை எடுத்தபோது அதனை நாம் ஏற்கவில்லை. கச்சத்தீவை விட்டுத்தர முடியாது என்று சட்டசபையிலேயே தீர்மானம் இயற்றி மத்திய அரசுக்கு அனுப்பியிருக்கிறோம்.

தமிழக மக்களின் உரிமைகளுக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து கச்சத்தீவை ‌இலங்கைக்கு விட்டுத் தரும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நாம் அந்த தீர்மானத்திலே வலியுறுத்தி இருக்கிறோம்.

தமிழக மக்கள் மட்டுமன்றி பல்வேறு அரசியல் கட்சிகளும் கச்சத்தீவுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்திருக்கிறார்கள்.

1991ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் கச்சத்தீவை மீட்டே தீருவோம் என்று அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவும் கூறியிருக்கிறார்.

த‌‌மிழக‌த்த‌ி‌ன் வாழ்வாதாரமாக திகழும் இந்த கச்சத்தீவு பிரச்சனையில் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம் என்பதை எடுத்துக்காட்டவே இதனை இங்கு கூறுகிறேன்.

இலங்கை அரசுடன் கச்சத்தீவு உடன்பாடு ஏற்பட்டாலும், அதன் மீதான தமிழக மக்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட்டன. அங்கு நடைபெறும் தேவாலய திருவிழாவில் இந்திய மீனவர்கள் கலந்துகொள்ளும் உரிமை, கச்சத்தீவில் மீனவர்கள் வலை காயப்போடும் உரிமை போன்ற உரிமைகள் அந்த ஒப்பந்தத்தில் நிலைநாட்டப்பட்டன.

ஆனால், 1976ம் ஆண்டு எமர்ஜென்சி காலத்தின்போது இரு நாட்டு அதிகாரிகளுக்கும் இடையே நடந்த கடிதப்போக்குவரத்து காரணமாகவே அந்த உரிமைகள் பறிபோய் விட்டன.

எனவே பறிபோன உரிமைகளை மீண்டும் பெற்றுத்தர வேண்டும் என்று நாம் மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

அவ்வாறு கச்சத்தீவில் நமக்குள்ள உரிமைகளை பெற்றுத் தரத்தவறினால் கச்சத்தீவே மீண்டும் எங்களுக்கு வேண்டும் என்று கேட்கும் நிலை உருவாகும்.

இந்த பிரச்சனையில் கட்சி வேறுபாடுகளையும், அரசியல் மாறுபாடுகளையும் கடந்து நாம் அனைவரும் ஒருமித்து குரல் எழுப்ப வேண்டும்.

அந்த வகையில் இன்று பட்டினிக்குரலாக நாம் நம்முடைய வேதனைகளையும், கண்டனத்தையும் தெரிவிக்கிறோம். இந்தக் குரலுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
டெ‌ல்‌லி‌யி‌ல் போரா‌ட்ட‌ம் நட‌த்தாதது ஏ‌ன்: துரைமுருக‌ன் ‌பதில்
மேட்டூர் அணை நீர்மட்டம் 67 அடியாக குறைந்தது
தமிழகத்தில் திமுக உண்ணாவிரதம்: கருணாநிதி தொடங்கினார்
திமுக உ‌ண்ணா‌விரத‌ம் இரு‌க்க வே‌ண்டிய இட‌ம் டெ‌ல்‌‌லி: ராமதாஸ்
சைக்கோ பீதி : 4 பேரிடம் போலீஸ் விசாரணை
போன் ஒட்டுகேட்பு: சங்கருக்கு நீதிமன்ற காவல்!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
வல்லமை தாராயோ
கல்யாணமான பின்னரும் காதலன் நினைவில் சிக்கித் தவிக்கும் ஓர் இளம் மனைவியின் உணர்வுப் போராட்டமே...
தசாவதாரம்
காத்தவராயன்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - தவிழ்ந்து விளையாடும் குழந்தைகளுக்கு அடிக்கடி புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது அந்த குழந்தைகளுக்கு...
மேலும் படிக்க|மேலும்...