|
| அரசிடம் தொலைநோக்கு பார்வை இல்லை: சரத்குமார் |
| திருப்பூர் (ஏஜென்சி), புதன்கிழமை, 16 ஜூலை 2008 ( 11:08 IST ) | |
மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான தொலைநோக்கு பார்வை தமிழக அரசிடம் இல்லை என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து திருப்பூரில் அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் தற்போது தொடர் மின்தடையால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழிற்சாலைகளில் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப வசதி மற்றும் வாங்கும் சக்தி அதிகரிப்பால் மக்களின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் இவற்றை பூர்த்தி செய்வதற்கான தொலைநோக்கு பார்வை அரசிடம் இல்லை.
தீவிரவாதிகள் என நினைத்து தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் சுட்டு வீழ்த்துகிறது. இதனால், மீன்பிடி தொழில் செய்ய முடியாத நிலையில் மீனவர்கள் தவிக்கின்றனர்.
இப்பிரச்சனைக்கு அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | வல்லமை தாராயோ | | கல்யாணமான பின்னரும் காதலன் நினைவில் சிக்கித் தவிக்கும் ஓர் இளம் மனைவியின் உணர்வுப் போராட்டமே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - தவிழ்ந்து விளையாடும் குழந்தைகளுக்கு அடிக்கடி புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது அந்த குழந்தைகளுக்கு... |
| |
|
|
|
|
|
|
|