|
| 100 தொகுதியில் தனித்துப் போட்டி: திருமாவளவன் |
| தேனி (ஏஜென்சி), புதன்கிழமை, 16 ஜூலை 2008 ( 10:22 IST ) | |
வரும் சட்டசபை தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் 100 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
இதுகுறித்து தேனியில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது:
தமிழகத்தில் திமுகவுக்கு 24 சதவீதம் வாக்கு வங்கி உள்ளது. அதிமுகவுக்கு 24 முதல் 26 சதவீதம் வரையும், காங்கிரசுக்கு 6 முதல் 8 சதவீதமும் வாக்குகள் உள்ளது.
ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு கடலூர் மாவட்டத்தைத் தவிர மற்ற இடங்களில் நிலையான வாக்கு வங்கி இல்லை.
இதனால், நிலையான வாக்கு வங்கியை பெற வரும் சட்டசபை தேர்தலில் 100 இடங்களிலாவது தனித்துப் போட்டியிடுவோம். அப்போதுதான் நிலையான வாக்கு வங்கியை நிர்ணயிக்க முடியும்.
2011ம் ஆண்டில் தேர்தல் ஆணையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அங்கீகாரம் பெற வேண்டும். அதற்காக கடுமையாக முயற்சிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | வல்லமை தாராயோ | | கல்யாணமான பின்னரும் காதலன் நினைவில் சிக்கித் தவிக்கும் ஓர் இளம் மனைவியின் உணர்வுப் போராட்டமே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - தவிழ்ந்து விளையாடும் குழந்தைகளுக்கு அடிக்கடி புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது அந்த குழந்தைகளுக்கு... |
| |
|
|
|
|
|
|
|