|
| தனுஷ்கோடி: 5வது நாளாக கடல் கொந்தளிப்பு! |
| ராமேஸ்வரம் (ஏஜென்சி), 17 மே 2008 ( 18:34 IST ) | |
தனுஷ்கோடியில் 5வது நாளாக கடல் கொந்தளிப்பாக இருந்ததால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி ஆகிய கடலோரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
இந்நிலையில், தனுஷ்கோடியில் இன்று பயங்கர சூறாவளி காற்று வீசியது. இதனால் கடலில் ராட்சத அலைகள் எழுந்தன. இதில், கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் சிக்கி சேதம் அடைந்தது.
கடல் அலைகளின் சீற்றம் அதிகமாக இருப்பதால், அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இதன் காரணமாக, தொடர்ந்து 5வது நாளாக இன்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது... |
| |
|
|
|
|
 | | WD |
| | | குருவி | | 'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - மரணம்... இதை நேர்மையாகவும், எளிமையாகவும், குழந்தைகளின் வயதுக்கேற்ற புரிதலின்... |
| |
|
|
|
|
|
|
|