|
| மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டை சாடவில்லை : கருணாநிதி |
| சென்னை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 16 மே 2008 ( 15:26 IST ) | |
'கூட இருந்தே குழி பறிப்போரின் தோழமை' என்று தனது அறிக்கை ஒன்றில் தாம் குமுறியிருப்பதை, வரதராஜன் தமது கட்சிக்கும் சேர்த்துத் தவறாக எடுத்துக் கொண்டமைக்காக தாம் மிகவும் வருந்துவதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏடு "தீக்கதிரி''ல் எழுதியுள்ள "மனம் திறந்து ஒரு வாழ்த்து!'' என்ற கட்டுரையைப் படித்தேன்.
"கூட இருந்தே குழி பறிப்போரின் தோழமை'' என்று நான் எனது அறிக்கை ஒன்றில் "குமுறியிருப்பதை''; வரதராஜன் தனது கட்சிக்கும் சேர்த்துத் தவறாக எடுத்துக் கொண்டமைக்காக நான் மிகவும் வருந்துகிறேன்.
குற்றமுள்ள நெஞ்சுதான் குறுகுறுக்க வேண்டுமே தவிர; விருப்போ வெறுப்போ அதனை வெளிப்படையாகக் கூறி நயம்பட இடித்துரைத்துத்திருத்துகின்ற நிலையில் "கூட்டணி தர்ம''த்தை எல்லா கட்டங்களிலும் கலந்துபேசி கடைப்பிடிக்கிற மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் என் அறிக்கையில் காணும் அந்த வாசகத்திற்குத் தங்களுக்குப் பொருந்தாத பொருளை ஏன் காணவேண்டும் என்பதே என் கவலை!
மற்றபடி; மனம் திறந்து அவர் எழுதியுள்ள என்னைப் பற்றிய வாழ்த்துக் கட்டுரையை (மேற்கண்ட இந்த ஒரு விளக்கத்தைத் தவிர வேறெதுவும் கூறாமல்) வரிக்குவரி அப்படியே ஏற்றுக் கொள்கிறேன் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது... |
| |
|
|
|
|
 | | WD |
| | | குருவி | | 'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்.. |
| |
|
|
|
|
|
|
|