|
| தமிழகத்தில் புதிய தீவிரவாத அமைப்பு : 3 பேர் கைது |
| சென்னை (ஏஜென்சி), 16 மே 2008 ( 10:49 IST ) | |
தமிழகத்தில் புதிய தீவிரவாத அமைப்பை தொடங்கி நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டிருந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜெய்ப்பூர் குண்டு வெடிப்புச் சம்பவம் எதிரொலியாக நாடு முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் போலீசார் தீவிர வாகனச் சோதனை மற்றும் நள்ளிரவு ரோந்து போன்ற கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை மண்ணடி பகுதியில் ஒரு லாட்ஜில் தீவிரவாத கும்பல் ஒன்று தங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த லாட்ஜை சுற்றி வளைத்தனர். அங்கு ஓர் அறையில் பதுங்கியிருந்த 3 பேரை கைது செய்தனர். எனினும் 2 பேர் தப்பியோடிவிட்டனர்.
பிடிபட்டவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
அதன்படி, ' இறைவன் ஒருவனே' என்ற புதிய தீவிரவாத அமைப்பை இவர்கள் துவங்கியுள்ளனர். இதன்மூலம், தமிழகத்தில் பல நாசவேலைகளில் ஈடுபட திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது.
இந்து அமைப்புகளை சேர்ந்த பல முக்கியத் தலைவர்களை தீர்த்துக்கட்ட இவர்கள் திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது... |
| |
|
|
|
|
 | | WD |
| | | குருவி | | 'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்.. |
| |
|
|
|
|
|
|
|