|
| ஓடும் லாரியில் இருந்த கம்பி குத்தி பயணிகள் 4 பேர் பலி |
| ஈரோடு (ஏஜென்சி), புதன்கிழமை, 14 மே 2008 ( 18:51 IST ) | |
ஈரோடு அருகே ஓடும் லாரிக்குள் ஏற்றப்பட்டிருந்த கம்பி பேருந்துக்குள் புகுந்ததால் அதில் பயணம் செய்த 4 பேர் பலியாயினர் ; 21 பேர் படுகாயமடைந்தனர்.
ஈரோடு அருகே உள்ள குண்டடம் என்ற இடத்தில் காற்றாலையின் விசிறி தாங்கும் கம்பிகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்துகொண்டிருந்தது.
இந்த லாரிக்கு பின்னால் குங்குமபாளையத்தை நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்துகொண்டிருந்தது. வளைவு ஒன்றில் லாரி திரும்பும்போது, லாரியில் இருந்த கம்பி சரிந்து பேருந்துக்குள் புகுந்தது.
இதில் பேருந்தில் பயணம் செய்த குங்குமபாளையத்தை சேர்ந்த மோகன் (25), கார்மேகம் (17), சரோஜினி (35), நாற்பது வயது மதிக்கதக்க அடையாளர் தெரியாத வாலிபர் ஆகியோர் கம்பி குத்தி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த 21 பேர் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது... |
| |
|
|
|
|
 | | WD |
| | | குருவி | | 'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்.. |
| |
|
|
|
|
|
|
|