|
| டெலிபோன் ஒட்டுகேட்பு விவகாரம்: விசாரணை தொடங்கியது |
| சென்னை (ஏஜென்சி), 14 மே 2008 ( 15:10 IST ) | |
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து, நீதிபதி சண்முகம் தலைமையிலான விசாரணைக் கமிஷன் இன்று தனது விசாரணையை துவக்கியது.
தமிழக உள்துறை செயலாளர் திரிபாதி மற்றும் ஊழல் தடுப்புப்பிரிவு கூடுதல் டிஜிபி உபாத்யாயா ஆகியோர் இடையேயான தொலைபேசி உரையாடல் ஒட்டுக் கேட்கப்பட்டதாக கடந்த மார்ச் இறுதியில் செய்திகள் வெளியானது. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து விசாரணை நடத்த நீதிபதி சண்முகம் தலைமையிலான விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் இன்று தனது விசாரணையை துவக்கியது.
உள்துறை செயலாளர் திரிபாதியிடம் விசாரணைக்குழு முதலில் விசாரணை நடத்தியது. பின்னர், ஏடிஜிபி உபாத்யாயா விசாரணை குழு முன் ஆஜராகி பதில் அளித்தார்.
இதற்கிடையே, லஞச ஊழல் வழக்கில் சிக்கிய தனது உறவினரை காப்பாற்றும்படி உபாத்யாயாவிடம் பரிந்துரை செயத விவகாரத்தில், தமிழக சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது... |
| |
|
|
|
|
 | | WD |
| | | குருவி | | 'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்.. |
| |
|
|
|
|
|
|
|