யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
நடப்பாண்டில் ரூ.110 கோடியில் 2 ஆயிரம் காவலர் குடியிருப்பு
சென்னை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 12 மே 2008   ( 16:25 IST )
நடப்பாண்டில் ரூ.110 கோடி செலவில் 2 ஆயிரம் காவலர் குடியிருப்புகள் கட்டித் தரப்படும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

சட்டசபையில் இன்று காவல்துறை மானியக் கோரிக்கை மீது நடைபெற்ற விவாதத்திற்கு பதிலளித்து அவர் பேசுகையில் வெளியிட்ட கட்டமைப்பு சார்ந்த அறிவிப்புகளாவன:

* படிப்படியாக அனைத்து புறகாவல் நிலையங்களும் முழு அளவிலான காவல் நிலையங்களாக தரம் உயர்த்தப்படும்.

* சொந்த கட்டிடம் இல்லாத 273 காவல் நிலையங்களுக்கு அடுத்த 3 ஆண்டுகளில் புதிதாக சொந்த கட்டிடங்கள் கட்டித்தரப்படும்.

* இவ்வாண்டு ராமநாதபுரத்திலுள்ள கீழ்செல்வனூர் உள்ளிட்ட 10 புறகாவல் நிலையங்கள், காவல் நிலையங்களாக மாற்றப்படும்.

* கம்பம், காரைக்குடி, தஞ்சை தெற்கு, பட்டுக்கோட்டை, வேளாங்கண்ணி, சிதம்பரம் உள்ளிட்ட 15 காவல் நிலையங்கள் தரம் உயர்த்தப்படும்.

* சென்னை மாவட்டம் செம்மஞ்சேரியிலும், வேலூர் மாவட்டம் அரியூரிலும் புதிதாக காவல் நிலையங்கள் தொடங்கப்படும்.

* கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு ரூ.3.80 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டித்தரப்படும்.

* இந்த ஆண்டு 110 கோடி ரூபாய் செலவில் 2 ஆயிரம் காவலர் குடியிருப்புகள் கட்டித்தரப்படும்.

* கலவை, சூரமங்கலம், திருவொற்றியூர் ஆகிய இடங்களில் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்கள் புதிதாக அமைக்கப்படும்.

சென்னை நகர காவல் துறை ஆணையரகத்தை பிரித்து புறநகர் பகுதிகளுக்கென்று புதிய காவல் ஆணையரகம் ஏற்படுத்தப்படும் என்றும் கருணாநிதி அறிவித்தார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
திருச்சியில் காவல் பயிற்சிப் பள்ளி : முதல்வர் அறிவிப்பு
ரா‌‌‌‌ஜீ‌வ் ‌‌‌நினைவு நா‌ள் : தொண்டர்களுக்கு காங். வே‌ண்டுகோ‌ள்
காவலர் தேர்வு முறையில் மாற்றம்: டி.ஜி.பி.க்கு அதிகாரம்
திருவள்ளூர்: தீ விபத்தில் தாயும் மகளும் பலி; 6 குடிசைகள் சாம்பல்
நட‌ப்பா‌ண்டி‌ல் தமிழக உணவு உ‌ற்ப‌த்‌தி அதிகரிக்கும் : ‌மு.க.‌ஸ்டா‌லி‌ன்
மலேசிய ஓட்டலில் தமிழர்கள் அவதி: திருமா கோரிக்கை
ஜோதிடம்
வார பலன் - மேஷம்: அதிரடி முன்னேற்றங்கள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறையிருக்காது. கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
சந்தோஷ் சுப்பிரமணியம்
ஜெயம் ரவியை வைத்து 'ரீ மேக்' படங்களில் 'ஹாட்ரிக்' வெற்றி அடித்துள்ளார் இயக்குனர் ராஜா. தெலுங்கு 'பொம்மரிலு'...
அறை எண் 305 ல் கடவுள்
நேபாளி - விமர்சனம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்..
மேலும் படிக்க|மேலும்...
Marketplace