|
| காவலர் தேர்வு முறையில் மாற்றம்: டி.ஜி.பி.க்கு அதிகாரம் |
| சென்னை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 12 மே 2008 ( 15:27 IST ) | |
தமிழகத்தில் காவலர்களைத் தேர்வு செய்ய ஆணை வெளியிடும் அதிகாரத்தை டி.ஜி.பி.க்கு வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
சட்டசபையில் இன்று காவல்துறை மானியக் கோரிக்கை மீது நடைபெற்ற விவாதத்திற்கு பதிலளித்து முதல்வர் கருணாநிதி பேசுகையில், தமிழ்நாடு அரசு அமைத்த 3-வது காவல் ஆணையம் அளித்த அறிக்கையின்படி, அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டு கடந்த 2 மாதங்களில் 104 பரிந்துரைகள் பரிசீலிக்கப்பட்டு அவற்றில் பெருபாலானவற்றை ஏற்கலாம் என்று அரசு முடிவு செய்துள்ளது என்று குறிப்பிட்டார்.
இதன்படி, காவலர் பணியிடங்களை நிரப்புவதில் ஏற்படும் கால தாமதத்தைத் தவிர்த்திடும் வகையில், இனி ஒவ்வொரு ஆண்டும் காவல்துறை காலி பணியிடங்களை மதிப்பீடு செய்து, தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்ய ஆணை வெளியிடும் அதிகாரத்தை, காவல்துறை தலைமை இயக்குனருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
இது, இந்த ஆண்டில் இருந்து நடைமுறைப்படுத்தப்படும் என்ற முதல்வர், 2009-10 ஆண்டில் இருந்து காவல்துறைக்கான பணியிடங்கள் நிரப்பப்படும் போது, சிறப்பு காவல்படை மற்றும் பிற காவலர்களுக்கு தனித்தனியாக தேர்வு நடத்தி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அவர் தெரிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம்:
அதிரடி முன்னேற்றங்கள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறையிருக்காது. கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம்... |
| |
|
|
|
|
 | | WD |
| | | சந்தோஷ் சுப்பிரமணியம் | | ஜெயம் ரவியை வைத்து 'ரீ மேக்' படங்களில் 'ஹாட்ரிக்' வெற்றி அடித்துள்ளார் இயக்குனர் ராஜா. தெலுங்கு 'பொம்மரிலு'... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்.. |
| |
|
|
|
|
|
|
|