|
| திருவள்ளூர்: தீ விபத்தில் தாயும் மகளும் பலி; 6 குடிசைகள் சாம்பல் |
| திருவள்ளூர் (ஏஜென்சி), திங்கள்கிழமை, 12 மே 2008 ( 13:18 IST ) | |
சென்னை அருகே திருவள்ளூர் மாவட்டத்தின் எர்ணாவூர் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்தனர்; 6 குடிசைகள் எரிந்து சாம்பலாயின.
எர்ணாவூரிலுள்ள அன்னை சிவகாமி நகரில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில், பிரியா (30) என்ற பெண்ணும் , அவரது மகள் பவானி என்பவரும் பலியாயினர். அவ்விருவரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தத் தீ விபத்தில் காயமடைந்த மூன்று பேர், திருவொற்றியூரிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நிவாரணப் பணிகள் மேற்கொள்வதற்காக, சம்பவம் நடந்த இடத்துக்கு மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர குமார் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்துள்ளனர்.
இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம்:
அதிரடி முன்னேற்றங்கள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறையிருக்காது. கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம்... |
| |
|
|
|
|
 | | WD |
| | | சந்தோஷ் சுப்பிரமணியம் | | ஜெயம் ரவியை வைத்து 'ரீ மேக்' படங்களில் 'ஹாட்ரிக்' வெற்றி அடித்துள்ளார் இயக்குனர் ராஜா. தெலுங்கு 'பொம்மரிலு'... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்.. |
| |
|
|
|
|
|
|
|