|
| வங்கிகளில் எளிய வழியில் கல்விக் கடன் பெறலாம் : ப.சிதம்பரம் |
| சிவகங்கை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 12 மே 2008 ( 10:55 IST ) | |
வங்கிகளில் கல்விக் கடன் பெறுவதற்கு ஆன்லைன் மூலம் எளிய வழியில் விண்ணப்பிக்கும் வசதி, நடப்பு ஆண்டு இறுதிக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்சின் புதிய கிளையை அவர் நேற்று திறந்து வைத்து பேசுகையில், "இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு முடிவில் கிராமப்புற மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர். அவர்கள் தங்கள் பெற்றோரிடம் பணம் இல்லாததால் படிப்பை நிறுத்தாமல் வங்கிகளில் கடன் பெற்று தங்கள் கல்வியை தொடரவேண்டும். கல்வி கடன் பெற நேரடியாக வங்கிகளுக்கு செல்லவேண்டிய அவசியம் இல்லை" என்றார்.
கணினி மூலம் வங்கிகளின் இணையதள முகவரியில் அவர்கள் மனு செய்யலாம் என்ற அவர், "ஒன்று, இரண்டு அல்ல 7, 8 வங்கிகளிலும் ஆன்லைன் மூலம் மனு செய்யலாம். ஒரு சில வங்கிகளில் மட்டும் பின்பற்றப்படும் இந்த நடைமுறை இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து வங்கிகளிலும் நடைமுறைபடுத்தப்படும். தகுதி உடையவர்களுக்கு தரமான கல்லூரிகளில் இடம் கிடைத்து விட்டால் அவர்களுக்கு கட்டாயம் கடன் தர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது" என்று சிதம்பரம் தெரிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம்:
அதிரடி முன்னேற்றங்கள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறையிருக்காது. கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம்... |
| |
|
|
|
|
 | | WD |
| | | சந்தோஷ் சுப்பிரமணியம் | | ஜெயம் ரவியை வைத்து 'ரீ மேக்' படங்களில் 'ஹாட்ரிக்' வெற்றி அடித்துள்ளார் இயக்குனர் ராஜா. தெலுங்கு 'பொம்மரிலு'... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்.. |
| |
|
|
|
|
|
|
|