யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
வேலூர் கோட்டையில் தொழுகை நடத்த முயன்றவர்கள் கைது
வேலூர் (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 9 மே 2008   ( 16:09 IST )
வேலூர் கோட்டை வளாகத்தில் தொழுகை நடத்த முயன்றவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

வரலாற்று புகழ் பெற்ற வேலூர் கோட்டை தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு மசூதி ஒன்று இருப்பதாக முஸ்லிகள் கூறிவருகின்றனர்.

இந்நிலையில், அந்த மசூதிக்கு சென்று தொழுகை நடத்தப் போவதாக தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா சமீபத்தில் அறிவித்திருந்தார்.

இதனால் கோட்டையைச் சுற்றி துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டனர். கோட்டைக்குச் செல்லும் வழிகள் அடைக்கப்பட்டன.

இந்நிலையில், டோல்கேட் பகுதியில் ஒரு திருமண மண்டபத்தில் இருந்து ஜவாஹிருல்லா தலைமையில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கோட்டையை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர்.

அவர்கள் கோட்டைக்குள் செல்ல முடியாதவாறு போலீசார் சாலையில் தடுப்புகளை ஏற்படுத்தினர். இதனால் அனைவரும் ஆபிசர்ஸ் லைன் பகுதியில் சாலையில் அமர்ந்து தொழுகை நடத்தினர்.

அப்போது ஒரு பகுதியினர், திடீரென தடையை மீறி கோட்டைக்குள் செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
வேலை வாய்ப்பு: பாமக போராட்ட அறிவிப்பு
சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது : அதிமுக குற்றச்சாட்டு
நாகை புறவழிச்சாலை மார்ச்சில் முடியும்: சுவாமிநாதன்
மாநகராட்சியாக வேலூர், தூத்துக்குடி : சட்ட மசோதா தாக்கல்
காவல்துறைக்கு தன்னாட்சி அதிகாரம் : பாமக வலியுறுத்தல்
'எய்ம்ஸ்: நீதிமன்ற தீர்ப்புகள் திருத்தப்படும்'
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace