|
| தா.கிருட்டிணன் கொலை வழக்கு: இன்று தீர்ப்பு
|
| வேலூர் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 8 மே 2008 ( 09:27 IST ) | |
தமிழக முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் படுகொலை வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்படுகிறது. இதையொட்டி சித்தூர் நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன். இவர் கடந்த சில ஆண்டுக்கு முன்பு மதுரையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் மு.க.அழகிரி, மதுரை துணை மேயர் மன்னன் உள்ளிட்ட 13 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவுபடி, இந்த வழக்கு விசாரணை ஆந்திர மாநிலம் சித்தூர் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் விசாரணைகள் முடிந்து, நீதிபதி துர்கா பிரசாத் இன்று தீர்ப்பளிக்கிறார். இதையொட்டி, நீதிமன்ற வளாகத்தில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|