|
| தாராபுரம் அருகே சாலை விபத்தில் 5 பேர் பலி |
| தாராபுரம் (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 29 ஏப்ரல் 2008 ( 14:10 IST ) | |
தாராபுரம் அருகே வேனும், கன்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 5 பேர் பலியானார்கள்.
மதுரை நாகமலைபுதுக்கோட்டையை சேர்ந்தவர் டைட்டாஸ் என்ற கடப்பசாமி (47).பாதிரியாராக இருந்த இவர் தலைமையில் ஆண்டு தோறும் கிறிஸ்தவ திருச்சபையினர் சுற்றுலா செல்வதும் வழக்கம்.
அதேபோல் இந்த ஆண்டும் அவர்கள் சுற்றுலா சென்றனர்.70 பேர் ஒரு பேருந்திலும், 10 பேர் ஒரு வேனில் சென்றனர். இன்று அதிகாலை 2.30 மணிக்கு வேன், ஈரோடு மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள குண்டடம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது.
அப்போது எதிரே வந்த கன்டெய்னர் லாரி ஒன்று, திருச்சபையினர் சென்ற வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில் டைட்டாஸ் உள்பட 5 பேர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.5 பேர் படுகாயமடைந்தனர்.
உடனடியாக காயமடைந்தவர்கள் தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|