|
| பிரதமரின் மெளனத்தால் சந்தேகம் வலுக்கிறது : பா.ஜ. |
| சென்னை (ஏஜென்சி), 29 ஏப்ரல் 2008 ( 10:08 IST ) | |
மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திய விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கின் மௌனம் காப்பதால் சந்தேகம் வலுக்கிறது என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
இதுகுறித்து சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், டி.ஆர்.பாலு மகன்களின் நிறுவனத்துக்கு சலுகை விலையில் எரிவாயு அளிக்குமாறு பெட்ரோலிய அமைச்சகத்துக்கு பிரதமர் அலுவலகம் 8 கடிதங்கள் எழுதி உள்ளது என்றும், ஆட்சியைத் தொடர்வதற்காக, கூட்டணிக் கட்சியின் நிர்ப்பந்தத்துக்கு பிரதமர் பணிந்துள்ளது தெரிகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் பதவியையும், பிரதமர் அலுவலகத்தையும் இந்த செயல் பலவீனப்படுத்தி உள்ளது என்று சாடியுள்ள அவர், தனியார் நிறுவனத்துக்கு எரிவாயு அளிப்பதில் பிரதமர் அலுவலகம் இந்த அளவுக்கு ஈடுபாடு காட்டுவது ஏன் என்பதை அறிய நாடே ஆவலாக உள்ளது என்றும், இந்த விவகாரத்தில் பிரதமரின் மௌனம் நீடிக்கும்போது, சந்தேகமும் வலுக்கிறது என்றும் கூறியுள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|