யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
த‌ன்மான‌த்தை கா‌க்க எழு‌த்த‌றிவு பெருக வே‌ண்டு‌ம்: கருணாநிதி
சென்னை(ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 22 ஏப்ரல் 2008   ( 18:37 IST )
நம் தன்மானத்தை நாமே உணரவும், காக்கவும் எழுத்தறிவு பெருக வேண்டும் எ‌ன்று தமிழக முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி உலக‌ பு‌த்தக‌த் ‌‌தின‌த்து‌க்கு வா‌ழ்‌த்து தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

நாளை கொண்டாடப்பட உள்ள உலக‌ பு‌த்தக‌த் ‌‌தின‌த்தையொட்டி அவர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள வா‌ழ்‌த்து செ‌ய்‌தி‌யில் கூறியிருப்பதாவது:

“எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்” என்று சின்னஞ் சிறுவர்களும் உணரும் வண்ணம் கல்வி நெறியைக் கைக்கொண்டவர்கள் தமிழர்கள்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பே ஏன் கற்க வேண்டும்? எப்படிக் கற்க வேண்டும்? என்றெல்லாம் வினாத் தொடுப்பதோடு நின்று விடாமல் விடையையும் கூறிச் சென்றுள்ளனர்.

“கற்க கசடற” என்றார் அ‌ய்யன் வள்ளுவர். தன்னிடமுள்ள கசடு போகவும், சமுதாயத்தில் நிலவும் கசடு போக்கவும் கற்க கசடற என்றார். மக்களிடம் படிக்கும் பழக்கம் அதிகமாக வேண்டும். படிப்பது அறிவுக்காக மட்டுமன்று. “எழுத்தறியத் தீரும் இழிதகைமை” என்றார்கள். நம் தன்மானத்தை நாமே உணரவும், காக்கவும் எழுத்தறிவு பெருக வேண்டும்.

எனவே, பொது நூலகங்களுக்கு ஒவ்வொரு நூலிலும் 1000 படிகளை வாங்கவும், அரசு நிக‌ழ்ச்சிகளில் நூல்களைப் பரிசாக வழங்கவும், தமி‌ழ் வளர்ச்சித் துறை வழியாக ஒவ்வொரு வகைப்பாட்டிலும் ஆண்டுதோறும் வெளிவரும் சிறந்த நூலுக்கு இருபதாயிரம் ரூபா‌ய் என்றும், வெளியிட்ட பதிப்பகத்தார்க்கு 5000 ரூபா‌ய் என்றும், 31 வகைப்பாடுகளுக்கும் பரிசுத் தொகையை உயர்த்தி வழங்கவும், ஊராட்சிகளில்
நூலகங்கள் அமைக்கவும் அரசு ஆணையிட்டுள்ளது.

உலகப் புத்தகத் திருநாள் விழாவைத் தமி‌ழ் வளர்ச்சித் துறையும், பொது நூலகத் துறையும், தென்னிந்தியப் பதிப்பாளர் சங்கமும் இணைந்து வாசகர்களோடும், எழுத்தாளர்களோடும் கொண்டாடுவதற்குப் பாராட்டுகள். எழுத்தாளர்களுக்கும், பதிப்பகத்தார்க்கும், வாசகர்களுக்கும் இந்த நாளில் என் இனிய வா‌ழ்த்துகள். “கற்க கசடற” .

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
டெ‌ல்‌லி மாநாடு புறக்கணிப்பு ஏன் ? ஸ்டாலின் ‌விள‌க்க‌ம்
டாக்டர்கள் ஊதிய முரண்பாடு: குழு அமைக்க ஜெ. வ‌லியுறு‌த்த‌ல்
நகசலிசம் : அனைத்துக் கட்சிளுக்கு கருணாநிதி வேண்டுகோள்
தமிழக அரசுக்கு எதிரான உட்லண்ட்ஸ்சின் மனு தள்ளுபடி
உலக பு‌த்தக‌ ‌தின‌ம்: சென்னையில் சிறப்பு கண்காட்சி
தேவர் சிலை அவமதிப்பை கண்டித்து 24ம் தேதி பந்த்: கார்த்திக்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : மனதில் பட்டதை மறக்காமல் பேசும் குணமுடைய நீங்கள், எதிரிக்கும் நல்லதே நினைப்பவர்கள்.உங்களுக்கு இந்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
சண்ட
ரஜினியின் 'மாப்பிள்ளை' கதையில் கூடுதலாக ஆக்சன், கவர்ச்சி மற்றும் காமெடி கலந்து சுந்தர்.சி...
யாரடி ‌நீ மோ‌கி‌னி
தரகு
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - கோடை காலத்தில் பெரும்பாலானோரும் உடல் சூட்டினால் அவதியுறும் நிலை...
மேலும் படிக்க|மேலும்...