|
| உலக புத்தக தினம்: சென்னையில் சிறப்பு கண்காட்சி |
| சென்னை (ஏஜென்சி), 22 ஏப்ரல் 2008 ( 13:42 IST ) | |
உலக புத்தக தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, சென்னையில் 8 இடங்களில் சிறப்புப் புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.
ஏப்ரல் 23ம் தேதி உலகப் புத்தகத் தினமாக கொண்டாடப்படுகிறது. புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை மக்களிடையே ஏற்படுத்தவும், அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு புத்தகத் தினத்தை முன்னிட்டு, தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து எழும்பூர் கன்னிமாரா பொதுநூலகத்தில் புத்தகத் திருவிழா நடத்துகின்றன.
புத்தக தினத்தை முன்னிட்டு, சென்னையில் 8 இடங்களில் சிறப்புப் புத்தகக் கண்காட்சியும் நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த உலக புத்தகத் தினவிழாவுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஒரு நாட்டின் வளர்ச்சி, அந்நாட்டு மக்களின் கல்வியறிவைப் பொறுத்தே அமையும் என்பதுதான் பெருந்தலைவர் காமராஜரின் கொள்கையாகும்.
அக்கல்வியறிவை வளர்க்க தூண்டுகோளாக அமையப் பெறுவது உலகத் புத்தகத் தினம். இந்த நன்னாளில் படைப்போர், படிப்போர், பதிப்பாளர் அனைவருக்கும் எனது வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :
மனதில் பட்டதை மறக்காமல் பேசும் குணமுடைய நீங்கள், எதிரிக்கும் நல்லதே நினைப்பவர்கள்.உங்களுக்கு இந்த... |
| |
|
|
|
|
 | | WD |
| | | சண்ட | | ரஜினியின் 'மாப்பிள்ளை' கதையில் கூடுதலாக ஆக்சன், கவர்ச்சி மற்றும் காமெடி கலந்து சுந்தர்.சி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - கோடை காலத்தில் பெரும்பாலானோரும் உடல் சூட்டினால் அவதியுறும் நிலை... |
| |
|
|
|
|
|
|
|