|
| ' பட்ஜெட்டுக்கு பின் விலைவாசி 20 % உயர்ந்துள்ளது ' |
| நாகர்கோவில்(ஏஜென்சி), திங்கள்கிழமை, 21 ஏப்ரல் 2008 ( 18:22 IST ) | |
மத்திய பட்ஜெட் அறிவிக்கப்பட்ட பின்னர் விலைவாசியில் 20 சதவீதம் உயர்வு ஏற்பட்டுள்ளதாக என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு குற்றம் சாற்றியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :
பட்ஜெட் அறிவிக்கப்பட்ட பிறகு 20 சதவீதம் உயர்வு ஏற்பட்டு உள்ளது.பட்ஜெட் அறிவித்த மூன்றாவது நாளே நாள் சிமெண்ட் விலை ரூ.250 ஆக அதிகரித்தது.விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது.வாங்கும் சக்தி மக்களிடம் அதிகரித்து உள்ளதாக மத்திய அமைச்சர்கள் சொல்வது பொய்யானது.
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் மத்திய அரசு அலுவலகம் முன் மறியல் போராட்டம் நடத்தினோம்.பருப்பு, சமையல் எண்ணெய் போன்றவை ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வருகிறது.
ஆன்லைன் வர்த்தகம் மூலம் பொருட்களை தேக்கி வைத்து, செயற்கையாக விலை நிர்ணயம் செய்து வர்த்தக சூதாட்டம், யூக பேரம் நடத்துகிறார்கள். இதை தடுக்க மத்திய அரசு முயற்சி எடுக்காமல் இருந்தது. இவ்வளவு போராட்டம் நடத்தியபிறகுதான் குறிப்பிட்ட காலத்துக்குள் ஆன்லைன் வர்த்தகம் கட்டுப்படுத்தப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள்.
அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் நியாயவிலைக் கடைகளில் கிடைக்கச் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :
மனதில் பட்டதை மறக்காமல் பேசும் குணமுடைய நீங்கள், எதிரிக்கும் நல்லதே நினைப்பவர்கள்.உங்களுக்கு இந்த... |
| |
|
|
|
|
 | | WD |
| | | சண்ட | | ரஜினியின் 'மாப்பிள்ளை' கதையில் கூடுதலாக ஆக்சன், கவர்ச்சி மற்றும் காமெடி கலந்து சுந்தர்.சி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - கோடை காலத்தில் பெரும்பாலானோரும் உடல் சூட்டினால் அவதியுறும் நிலை... |
| |
|
|
|
|
|
|
|