|
| கிரீமிலேயரை நீக்க தொடர்ந்து வலியுறுத்துவோம் : டி.ஆர்.பாலு |
| சென்னை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2008 ( 15:21 IST ) | |
இட ஒதுக்கீட்டிலிருந்து கிரீமிலேயரை நீக்க தொடர்ந்து வலியுறுத்துவோம் என்று மத்திய தரைவழி மற்றும் கப்பல் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு கூறினார்.
தென் சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், நிருபர்களிடம் கூறியதாவது:
மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு அளிக்கப்பட்டுள்ள 27 சதவீத இடஒதுக்கீட்டிலிருந்து வருமான வரம்பை நீக்கும்படி மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம்.
சென்னை துறைமுகக் கழகத்தில் இருக்கும் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். சென்னை நகரில் முதல் கடல்சார் பல்கலைக்கழகம் திட்டமிட்டபடி அமைக்கப்படும்.
பிற இடங்களில் அமையவுள்ள கடல்சார் பல்கலைக் கழகங்கள் குறித்து மத்திய அமைச்சரவை முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய... |
| |
|
|
|
|
 | | WD |
| | | கண்ணும் கண்ணும் | | ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்... |
| |
|
|
|
|
|
|
|