யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
மதிமுக அங்கீகார விவகாரம்: 21ம் தேதி விசாரணை
சென்னை/புதுடெல்லி (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2008   ( 10:06 IST )
மதிமுக அங்கீகாரம் குறித்த இறுதிக்கட்ட விசாரணையை வரும் 21ம் தேதிக்கு தேர்தல் கமிஷன் ஒத்திவைத்துள்ளது.

மதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சி மோதலால் எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் போட்டி மதிமுகவாக தனிப்பிரிவாக செயல்பட்டு வருகின்றனர்.

தங்களது தலைமையிலான மதிமுக தான் உண்மையானது என்று இவர்களும், வைகோ தலைமையிலான பிரிவினரும் தேர்தல் கமிஷனிடம் விண்ணப்பித்து உள்ளனர்.

இதற்காக இரு தரப்பினரும் உரிய ஆதாரங்களை தலைமைத் தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.

நேற்றைய விசாரணையின்போது, வைகோ தலைமையிலான மதிமுகவினர் தேர்தல் கமிஷனில் முன்பாக நேரில் ஆஜராகி தங்களது தரப்பு வாதத்தை எடுத்து வைத்தனர்.

அப்போது செஞ்சி ராமச்சந்திரன் தரப்பில் கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய 4 வாரம் கால அவகாசம் கேட்கப்பட்டது.

ஆனால் இதை நிராகரித்த தேர்தல் கமிஷன், இறுதிக்கட்ட விசாரணையை வரும் 21ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இதனால், யார் உண்மையான மதிமுக என்பது வரும் 21ம் தேதிக்கு பின்னர் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தேசிய வேலைவாய்ப்பு: தமிழகத்துக்கு ரூ.190 கோடி ஒதுக்கீடு
மயிலை கபாலீஸ்வரர் கோ‌யிலில் கொள்ளை
ஒட்டுகேட்பு விவகராத்தில் முதல்வர் விளக்கம் : சரத் அதிர்ச்சி
காங். பெயரில் போலி அமைப்புகள் : கிருஷ்ணசாமி எச்சரிக்கை
மதவாதிகளுக்கு இடம் தராதீர் : கம்யூ.-க்கு கருணாநிதி கோரிக்கை
ஊதிய உயர்வு கோரி அரசு டாக்டர்கள் தர்ணா
ஜோதிடம்
வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
கண்ணும் கண்ணும்
ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி...
வெ‌ள்‌ளி‌த்‌திரை
வ‌ம்பு‌ச்ச‌ண்ட
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்...
மேலும் படிக்க|மேலும்...