|
| அம்பேத்கர் விருது: திருமாவளவன் நாளை வழங்குகிறார் |
| சென்னை (ஏஜென்சி), 13 ஏப்ரல் 2008 ( 14:13 IST ) | |
சட்டமேதை அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு, திருச்சியில் நாளை நடைபெறும் விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விருதுகள் வழங்கப்படுகிறது.
திருச்சி உழவர் சந்தை திடலில் நாளை மாலை 3 மணிக்கு நடைபெறும் இவ்விழாவில் பல்வேறு துறைகளில் சிறப்பாக சேவை புரிந்த 6 பேருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் விருதுகள் வழங்கப்படுகின்றன.
கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில், பாவலர் இன்குலாபிற்கு 'அம்பேத்கர் சுடர்' விருது வழங்கப்படுகிறது.
'சொல்லின் செல்வர்' ஆ.சக்திதாசனுக்கு 'அயோத்தி தாசர் ஆதவன்' விருதும், வே.ஆணைமுத்துவிற்கு 'பெரியார் ஒளி விருது'ம் வழங்கப்படுகிறது.
இலக்கிய செல்வர் குமரி அனந்தனுக்கு 'காமராசர்' விருது, அப்துல் நாசிர் மதானிக்கு 'காயிதே மில்லத் பிறை' விருது, கவிஞர் காசி ஆனந்தனுக்கு 'செம்மொழி ஞாயிறு' ஆகிய விருதுகளை திருமாவளவன் வழங்கி கவுரவிக்கிறார்.
இதையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் திருச்சியில் குவிந்து வருகின்றனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய... |
| |
|
|
|
|
 | | WD |
| | | கண்ணும் கண்ணும் | | ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்... |
| |
|
|
|
|
|
|
|