|
| திருச்சியில் போலி பாஸ்போர்ட் வைத்திருந்த இருவர் கைது |
| திருச்சி (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 25 மார்ச் 2008 ( 11:49 IST ) | |
திருச்சி விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்டுடன் வந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
சிங்கப்பூரிலிருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த விமானத்திலிருந்து இறங்கிய பத்மநாபன் என்பவரை சந்தேகத்தின் பேரில் மடக்கிய குடியுரிமை அதிகாரிகள் , அவரது பாஸ்போர்ட்டை வாங்கி சோதித்து பார்த்தபோது அது போலியானது என்பது தெரிய வந்தது.
இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.விசாரணையில் அவர் திருவாரூர் மாவட்டம் மேலவடியக்காடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.
அதேபோன்று சிங்கப்பூர் செல்வதற்காக வந்த சுப்பையா என்பவர் வைத்திருந்த பாஸ்போர்ட்டும் போலியானது என்பது தெரிய வந்தது.இதனையடுத்து அவரும் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.
கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு , சிறையில் அடைக்கபட்டனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த... |
| |
|
|
|
|
 | | FE |
| | | வெள்ளித்திரை | | திரையுலகில் நடக்கும் மோசடிகள் மற்றும் சோகங்களை கதை கருவாக தேர்வு செய்ததற்காகவே பிரகாஷ் ராஜூக்கும்... |
|
| |
|
|
|
|
|
| சிகிச்சைகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்... |
| |
|
|
|
|
|
|
|