|
| 'புதிய புயல் சின்னம்; தமிழகத்தில் இன்றும் மழை பெய்யும்' |
| சென்னை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 25 மார்ச் 2008 ( 11:08 IST ) | |
கன்னியாகுமரி கடல் பகுதியில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், தமிழகம் முழுவதும் இன்றும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக் கடலில் கேரள கடற்கரைக்கு அப்பால் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவிழந்து மறைந்துவிட்ட நிலையில், தற்போது கன்னியாகுமரி அருகே வலு குறைந்த நிலையில் புதிதாக ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.
இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்றும், தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; அவ்வப்போது விட்டுவிட்டு மழையோ அல்லது இடியுடன்கூடிய கனமழையோ பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த... |
| |
|
|
|
|
 | | FE |
| | | வெள்ளித்திரை | | திரையுலகில் நடக்கும் மோசடிகள் மற்றும் சோகங்களை கதை கருவாக தேர்வு செய்ததற்காகவே பிரகாஷ் ராஜூக்கும்... |
|
| |
|
|
|
|
|
| சிகிச்சைகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்... |
| |
|
|
|
|
|
|
|