|
| அரசு கேபிள். டி.வி.யின் நன்மை: சரத்குமாருக்கு கருணாநிதி பதில் |
| சென்னை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 19 பிப்ரவரி 2008 ( 16:23 IST ) | |
அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தால் மக்களுக்கு என்ன நன்மைகள் என்பதை அரசு விளக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அகில ௦இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமாரின் அறிக்கைக்கு, முதல்வர் கருணாநிதி இன்று பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து கேள்வி - பதில் வடிவில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அரசினால் மக்களுக்கு என்ன பயன் என்று கேட்பவர்கள் கூட இருக்கிறார்கள். ஒரு தொலைக்காட்சியில் சிலரது முகங்களை காட்டினால்கூட, 'பாவம்' என்று கூட நினைத்து மறுத்த காலம் ஒன்று உண்டு. தற்போது அதே தொலைக்காட்சியில் அன்றைக்கு புறக்கணிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டவர்களின் முகங்கள் எல்லாம் தாராளமாக காட்டப்படுகின்றன.
அதற்கு, செஞ்சோற்றுக் கடன் கழிக்க வேண்டாமா? அதன் விளைவுதான் அரசுக்கு எதிராக அவர்கள் பெயரால் தற்போது வெளிவரும் சில அறிக்கைகள்.
இவ்வாறு தனது அறிக்கையில் முதல்வர் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தால் மக்களுக்கு என்ன நன்மைகள், சலுகைகள் கிடைக்கும் என்பதை அரசு தெளிவாக விளக்க வேண்டும் என்றும் சரத்குமார் தனது அறிக்கை ஒன்றில் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - பொறுமையும், இரக்க மனமும் கொண்ட இவரிடம் நம்பகத்தன்மை மிகுதியாக இருக்கும். அன்பு நிறைந்த... |
| |
|
|
|
|
 | | FE |
| | |
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - நினைவாற்றலை பெருக்குவது மட்டுமின்றி, மூளையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தடுப்பதற்கு வழிவகை... |
| |
|
|
|
|
|
|
|