யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
மன்மோகன் சிங் நாளை பதவியேற்கிறார்
புதுடெல்லி (ஏஜென்சி), வியாழக்கிழமை, 21 மே 2009   ( 12:35 IST )
நாட்டின் பிரதமராக 2வது முறையாக மன்மோகன் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். ராஷ்டிரபதி பவனில் நாளை நடக்கும் விழாவில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 322 எம்.பி.க்களின் ஆதரவு கிடைத்துள்ள நிலையில், நேற்று மாலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன், குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை மன்மோகன் சிங் சந்தித்தார்.

அப்போது மன்மோகன் சிங்கை பிரதமராக நியமிக்கும் கடிதத்தை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் அவரிடம் வழங்கினார். நாளை ராஷ்டிரபதி பவனில் நடக்கும் பதவியேற்பு விழாவில் குடியரசுத் தலைவர் மன்மோகன் சிங்கிற்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் துரிதகதியில் நடந்து வருகின்றன.

மத்தியில் அமைய உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைச்சரவையில் தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் இடம்பெறுகின்றன. எனவே, இன்று மாலைக்குள் அமைச்சரவை ஒதுக்கீடு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ராஜீவ் நினைவிடத்தில் சோனியா, பிரதமர் அஞ்சலி
மன்மோகன் சிங் மீண்டும் பிரதமராக நியமனம்
குடியரசு தலைவருடன் சோனியா, பிரதமர் சந்திப்பு
மும்பை தாக்குதல்: பாக்.கிடம் கூடுதல் ஆதாரங்கள்
பஞ்சாப்: ரயில் மோதி பள்ளிக் குழந்தைகள் உட்பட 8 பேர் பலி
குடியரசுத் தலைவரை சோனியா, பிரதமர் சந்திக்கிறார்கள்
செய்திகள்
தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி ம‌த்‌திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ‌தி.மு.க. செயற்குழு‌வி‌ல் ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவ‌ே‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
நியூட்டனின் 3 ஆம் விதி - விமர்சனம்
வழக்கமான பழிவாங்கும் கதை.இரண்டே மணி நேரத்தில் பழிக்குப் பழி படலத்தை முடித்துக் கொள்வது தமிழுக்கு புதுசு...
நாளை நமதே - விமர்சனம்
கார்த்திக் அனிதா
ஆரோக்கியம்
நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்...
மேலும் படிக்க|மேலும்...