யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
பஞ்சாப்: ரயில் மோதி பள்ளிக் குழந்தைகள் உட்பட 8 பேர் பலி
ஜலந்தர் (ஏஜென்சி), புதன்கிழமை, 20 மே 2009   ( 17:50 IST )
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தில் அடங்கிய கும்தாரா கிராமத்தில், ஆளில்லா ரயில்வே கிராஸிங்கில் சென்ற வேன் மீது ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் பள்ளிக்குழந்தைகள் 7 பேர் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயம் அடைந்தனர்.

நுர்மஹால் என்ற இடத்தில் இன்று காலை இந்த விபத்து ஏற்பட்டதாகவும், ரயில் வருவதை வேன் ஓட்டுனர் பார்க்கவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

ரயில் மோதிய வேகத்தில் வேன் சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டதாகவும், இதனால், அதில் இருந்த பள்ளிக் குழந்தைகள் உட்பட உயிரிழந்தவர்களின் உடல்கள் சிதறியதாகவும் காவல்துறையினர் கூறினர்.

வேன் ஓட்டுனரும், 3 சிறுவர்களும் அதே இடத்தில் பலியானதாகவும், மேலும் 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததாகவும் அவர்கள் கூறினர்.

காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவித்தனர்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
குடியரசுத் தலைவரை சோனியா, பிரதமர் சந்திக்கிறார்கள்
ராஜசேகர ரெட்டி இன்று பதவியேற்பு
ராகுல் அமைச்சராக பிரணாப் விருப்பம்
7 அமைச்சர் பதவி திமுக கோருகிறது?
கருணாநிதியுடன் எம்.கே. நாராயணன் சந்திப்பு
ஐ.மு. கூட்டணி தலைவராக சோனியா மீண்டும் தேர்வு
செய்திகள்
தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி ம‌த்‌திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ‌தி.மு.க. செயற்குழு‌வி‌ல் ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவ‌ே‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
நியூட்டனின் 3 ஆம் விதி - விமர்சனம்
வழக்கமான பழிவாங்கும் கதை.இரண்டே மணி நேரத்தில் பழிக்குப் பழி படலத்தை முடித்துக் கொள்வது தமிழுக்கு புதுசு...
நாளை நமதே - விமர்சனம்
கார்த்திக் அனிதா
ஆரோக்கியம்
நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்...
மேலும் படிக்க|மேலும்...