யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
பொருளாதார சீர்திருத்தம், வேலை வாய்ப்பிற்கு முன்னுரிமை: மன்மோகன் சிங்
புதுடெல்லி (ஏஜென்சி), புதன்கிழமை, 20 மே 2009   ( 11:11 IST )
உலகளாவிய பொருளாதாரப் பின்னடைவின் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையை போக்க முதலீட்டிற்கும், வேலை வாய்ப்பிற்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்று மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மன்மோகன் சிங், “முதலீட்டிலும், வேலை வாய்ப்பிலும் ஒரு சுணக்க நிலை ஏற்பட்டுள்ளது. இதனை நாம் மாற்ற வேண்டும். வளர்ச்சியை மீண்டும் நிலைநிறுத்தி, அதன் பலனை பரவலாக்க வேண்டும்” என்று கூறினார்.

நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை சீரான நிலையில் தொடரச் செய்ய வேண்டுமெனில் புதிய முலதன வரவும், அரசு நிதியை நன்கு பயன்படுத்தக்கூடிய ஆளுமையும் தேவை என்று கூறினார்.
இந்தியாவின் பிரதமராக இரண்டாவது முறையாக பதவியேற்கப்போகும் மன்மோகன் சிங், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க பொருளாதார சீர்திருத்தமும், வேளாண்மையை பலப்படுத்தவும், ஊரக மேம்பாட்டை துரிதப்படுத்தவும் வேண்டும் என்று கூறினார்.

உலகளாவிய பொருளாதாரப் பின்னடைவு நம்மை வெகுவாக பாதித்துள்ளது. எனவே பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள கொள்கைகளை, திட்டங்களை நிறைவேற்ற ஒரு காலவரையுடன் கூடிய இலக்கு ஒவ்வொரு அமைச்சகத்திற்கும் நிர்ணயிக்கப்படும் என்றும், ஒவ்வொரு அமைச்சகத்தின் திறனையும் மதிப்பீடு செய்ய காலாண்டு ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் கூறினார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
அமைச்சரவை பட்டியல் : ஐமுகூ நாளை ஆலோசனை
ஜூன் 2 ல் மக்களவை கூடுகிறது
ராகுல் இலாகா இல்லாத அமைச்சர் ?
பிரதமராக தேர்வு செய்யப்பட்டார் மன்மோகன் சிங்
அக்னி - 2 ஏவுகணை சோதனை வெற்றி
ஐ.மு. கூட்டணி அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு : மாயாவதி
செய்திகள்
தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி ம‌த்‌திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ‌தி.மு.க. செயற்குழு‌வி‌ல் ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவ‌ே‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
நியூட்டனின் 3 ஆம் விதி - விமர்சனம்
வழக்கமான பழிவாங்கும் கதை.இரண்டே மணி நேரத்தில் பழிக்குப் பழி படலத்தை முடித்துக் கொள்வது தமிழுக்கு புதுசு...
நாளை நமதே - விமர்சனம்
கார்த்திக் அனிதா
ஆரோக்கியம்
நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்...
மேலும் படிக்க|மேலும்...