யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
இலங்கையில் அதிகாரப்பகிர்வுக்கு நடவடிக்கை : இந்தியா
புதுடெல்லி (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 19 மே 2009   ( 12:34 IST )
இலங்கையில் போர் முடிவுக்கு வந்திருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்திருப்பதைத் தொடர்ந்து, அங்கு வாழும் தமிழர்கள் உள்பட அனைத்து பிரிவு மக்களுக்கும் ம உரிமை கிடைப்பதற்கான முயற்சிகளை இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று ந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் விஷ்ணு பிரகாஷ், இலங்கையில் போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய இருப்பிடம் மற்றும் மறுநிவாரணம் அளிக்க வேண்டிய தருணம் இது என்று கூறினார்.

இலங்கையில் வாழும் மக்களுக்கு அந்நாட்டு அரசியல் சட்டத்திற்குட்பட்டு, அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க அந்நாட்டு அரசு முன்வர வேண்டும்.

இலங்கையில் வாழும் தமிழர்கள் உள்ளிட்ட அனைவரும் தங்கள் சொந்த நாட்டில் மரியாதையுடன் நடத்தப்படுவதாக உணர்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இலங்கையில் அரசுக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நிவாரணம் அளிக்க இந்தியா செயலாற்றும் என்று உறுதியளித்த வெளியுறவு செய்தித்தொடர்பாளர், மருத்துவ உதவியாக மேலும் 3 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்துகளுடன் இந்திய விமானம் வரும் வெள்ளிக்கிழமையன்று இலங்கை புறப்பட்டுச் செல்லும் என்றார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மன்மோகன் மீண்டும் பிரதமராக தேர்வு செய்ய்ப்படுகிறார்
ஜனாதிபதியுடன் தேர்தல் ஆணையர்கள் சந்திப்பு
தே.ஜ.கூட்டணி கூட்டம் திடீர் ரத்து !
'பேஷன் ஷோ' நிகழ்ச்சியில் ஆபாசம் : நடிகர் அக்சய் குமார் கைது
எதிர்க்கட்சித் தலைவராக அத்வானி நீடிப்பார் : பா.ஜனதா
குஜராத்தில் சாலை விபத்து : 21 பேர் பலி
செய்திகள்
தேசியம் - ஆந்திர மாநிலத்தில் ராஜசேகர ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி மீண்டும் அமைகிறது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
நியூட்டனின் 3 ஆம் விதி - விமர்சனம்
வழக்கமான பழிவாங்கும் கதை.இரண்டே மணி நேரத்தில் பழிக்குப் பழி படலத்தை முடித்துக் கொள்வது தமிழுக்கு புதுசு...
நாளை நமதே - விமர்சனம்
கார்த்திக் அனிதா
ஆரோக்கியம்
நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்...
மேலும் படிக்க|மேலும்...