|
| மன்மோகன் மீண்டும் பிரதமராக தேர்வு செய்ய்ப்படுகிறார் |
| புதுடெல்லி (ஏஜென்சி), 19 மே 2009 ( 11:11 IST ) | |
டெல்லியில் இன்று நடைபெற உள்ள காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் புதிய பிரதமராக மன்மோகன் சிங் மீண்டும் தேர்வு செய்யப்பட உள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் டெல்லியில் கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமையில் இன்னும் சற்று நேரத்தில் டெல்லியில் நடைபெற உள்ளது.இதில் காங்கிரஸ் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கின்றனர்.
இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்படுகிறார்.அதேபோன்று புதிய பிரதமராக மன்மோகன் சிங் மீண்டும் தேர்வு செய்யப்படவுள்ளார்.
இதையடுத்து குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலை இன்று மாலை சந்திக்கவிருக்கும் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு ஆதரவு அளிக்கும் கட்சிகள் மற்றும் உறுப்பினர்கள் பட்டியலை அளிக்கிறார்.
பின்னர் புதிய அரசு அமைக்க வருமாறு மன்மோகன் சிங்கை குடியரசுத் தலைவர் முறைப்படி அழைப்பு விடுவார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஆந்திர மாநிலத்தில் ராஜசேகர ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி மீண்டும் அமைகிறது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|