|
| ஜனாதிபதியுடன் தேர்தல் ஆணையர்கள் சந்திப்பு |
| புதுடெல்லி ( ஏஜென்சி), திங்கள்கிழமை, 18 மே 2009 ( 17:14 IST ) | |
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்ற மக்களவை உறுப்பினர்களின் பட்டியலை கொடுப்பதற்காக,ஜனாதிபதி பிரதிபா பாட்டீலை தேர்தல் ஆணையர்கள் இன்று சந்திக்கின்றனர்.
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, கூடுதல் இடங்களை பெற்ற காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியமைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
தேர்தல் முடிவுகள் அறிவிப்பட்ட இரண்டு அல்லது மூன்று தினங்களுக்குள் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை குடியரசுத் தலைவரிடம் அளிக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை.
அதன்படி, நவீன்சாவ்லா தலைமையில் குரேஷி மற்றும் சம்பத் ஆகியோர் அடங்கிய 3 பேர் கொண்ட தேர்தல் ஆணையர்கள் குழு, இன்று மாலை 6 மணிக்கு குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலை சந்தித்து, புதிய மக்களவை உறுப்பினர்களின் பட்டியலை கொடுக்கிறது.
புதிய நாடாளுமன்றம் அமைந்ததும், இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றுவார்.அதற்கு முன்னதாக, புதிய உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைப்பதற்காக குடியரசுத் தலைவரே தற்காலிக சபாநாயகராகவும், அவையின் மூத்த உறுப்பினராகவும் இருப்பார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஆந்திர மாநிலத்தில் ராஜசேகர ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி மீண்டும் அமைகிறது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|