|
| எதிர்க்கட்சித் தலைவராக அத்வானி நீடிப்பார் : பா.ஜனதா |
| புதுடெல்லி (ஏஜென்சி), 18 மே 2009 ( 17:08 IST ) | |
பா.ஜனதா கட்சியின் நாடாளுமன்றக் குழு உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்க அத்வானி ஒப்புக் கொண்டுள்ளார்.
தலைநகர் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜனதா கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் இதனைத் தெரிவித்தார்.
அத்வானியின் தலைமையும், வழிகாட்டுதலும் அவசியம் என்று நாடாளுமன்றக் கட்சிக் குழு கேட்டுக் கொண்டதாகவும், அதனை ஏற்று 15 வது மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்க அவர் சம்மதம் தெரிவித்ததாகவும் ராஜ்நாத் சிங் கூறினார்.
மக்களவைத் தேர்தலில் பா.ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பை துறப்பதாக அத்வானி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஆந்திர மாநிலத்தில் ராஜசேகர ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி மீண்டும் அமைகிறது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|