|
| குஜராத்தில் சாலை விபத்து : 21 பேர் பலி |
| பனாஸ்காந்தா (ஏஜென்சி), திங்கள்கிழமை, 18 மே 2009 ( 15:30 IST ) | |
குஜராத் மாநிலத்தில் நடந்த கோர விபத்தில் 10 பெண்கள், 5 குழந்தைகள் உள்பட 21 பேர் பலியாகினர்.28 பேர் படுகாயம் அடைந்தனர்.
குஜராத் மாநிலம், பாடான் மாவட்டத்திலுள்ள ரத்தன்பூர் என்ற இடத்தில் வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது.அதில் பெண்கள், குழந்தைகள் உள்பட ஏராளமானோர் இருந்தனர்.அங்குள்ள தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சினோத் பாட்டியா கிராமம் அருகே வந்தபோது, எதிரே வந்த சரக்கு லாரி வேன் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
இதில் வேனில் இருந்த 10 பெண்கள், 5 குழந்தைகள் உள்பட 21 பேர் உடல்சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.இந்த கோர விபத்தில் படுகாயம் அடைந்த 28 பேர் ரத்தன்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஆந்திர மாநிலத்தில் ராஜசேகர ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி மீண்டும் அமைகிறது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|