|
| மூன்றாவது அணி என்பது இல்லை: அத்வானி |
| புதுடெல்லி (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 31 மார்ச் 2009 ( 13:36 IST ) | |
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அல்லது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சில கட்சிகள் இல்லை என்பதற்காக அவற்றை மூன்றாவது அணி என்று அர்த்தம்கொள்ள முடியாது என்று பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் அத்வானி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அத்வானி கூறியதாவது :
காங்கிரஸ் உடனோ அல்லது பா.ஜ.க.வுடனோ சில கட்சிகள் தப்போது இல்லை என்பதற்காக அவற்றை மூன்றாவது அணி என்று கூறக்கூடாது. மூன்றாவது அணி இருப்பதாக நான் கருதவில்லை.
இந்தக் கட்சிகளில் பெரும்பாலானவை - இடதுசாரிகள், தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, பிஜூ ஜனதா தளம், மதசார்பற்ற ஜனதா தளம் போன்ற தங்களை மூன்றாவது அணி என்று கூறிக்கொள்ளும் கட்சிகள்- வலுவாக உள்ள மாநிலங்களில் அவற்றிற்குக் காங்கிரஸ்தான் முக்கிய அரசியல் எதிரியாக உள்ளது.
இந்நிலையில், இந்தக் கட்சிகள் காங்கிரசை எதிர்ப்பதற்காகத் தேர்தலுக்கு முன்பு பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துக்கொண்டால் முஸ்லிம்களின் வாக்கு தங்களுக்குக் கிடைக்காது என்று நினைக்கின்றன.எனவே, தேர்தலுக்குப் பின்பு தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் அரசு அமையும் சூழல் வந்தால், மூன்றாவது அணி என்று கூறிக்கொள்ளும் கட்சிகள் அதில் சேரும் என்றே நான் கருதுகிறேன் என்றார் அத்வானி.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சர்வதேசம் - லாகூருக்கு அருகே உள்ள மனாவான் பகுதியில் செயல்பட்டு வரும் காவலர் பயிற்சி மையத்தின் மீது திடீர் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் 6 பேரை பாதுகாப்புப் படையினர்... |
| |
|
|
|
|
 | | | காஞ்சிவரம் - விமர்சனம் | | பிரியதர்ஷன் வணிக ரீதியான சமாதானங்களுக்கு இடம் கொடுக்காமல் இயக்கியிருக்கும் முதல் படம் காஞ்சிவரம். மலையாளியான அவர் தமிழகத்தின் பாரம்பரிய காஞ்சி பட்டு நெசவாளர்களின் துயரத்தை சொல்ல முயன்றிருப்பது வரவேற்க வேண்டிய விஷயம்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - இயற்கையில் நமக்கு கிடைக்கும் பல்வேறு பொருட்கள் மருத்துவ குணம் நிறைந்தவையாக உள்ளன. அந்த வகையில் தேன் சிறந்த மருத்தாக விளங்குகிறது... |
| |
|
|
|
|
|
|