|
| புலனாய்வு ஏஜென்சி : முதல்வர்களுடன் சிதம்பரம் ஆலோசனை |
| புதுடெல்லி (ஏஜென்சி), 7 ஜனவரி 2009 ( 18:49 IST ) | |
பயங்கரவாதத்தை முறியடிப்பதற்காக அமைக்கப்படவுள்ள தேசியப் புலனாய்வு ஏஜென்சி குறித்து மாநில முதல்வர்களிடம் ஆலோசனை கேட்டுள்ள உள்துறை அமைச்சர் சிதம்பரம், தேவைப்பட்டால் பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்கள் மேலும் கடுமையாக்கப்படும் என்று உறுதியளித்தார்.
பயங்கரவாதத்தை முறியடிக்க தேசியப் புலனாய்வு ஏஜென்சி ஒன்றை அமைக்க வகை செய்யும் சட்டம், சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் ஆகியவை குறித்து டெல்லியில் நடந்து வரும் முதல்வர்கள் மாநாட்டில் உள்துறை அமைச்சர் சிதம்பரம் விளக்கிக் கூறினார்.
அப்போது சில மாநிலங்களின் முதல்வர்கள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்கள் இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.அவர்கள் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று சிதம்பரம் உறுதியளித்தார்.
இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய சிதம்பரம், "அதிருப்தி தெரிவித்துள்ள முதல்வர்களுக்கு தேசியப் புலனாய்வு ஏஜென்சி குறித்து நான் விளக்கமளிக்கப் போகிறேன், மேலும் அவர்களின் ஆலோசனையைப் பெறுவேன். தேவைப்பட்டால் வேண்டிய மாற்றங்களுடன் இச்சட்டம் மீண்டும் அறிமுகம் செய்யப்படும் " என்று கூறினார்.
அதே சமயம் தேசியப் புலனாய்வு ஏஜென்சி குறித்து 6 மாநிலங்களின் முதல்வர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளதாக ஒப்புக்கொண்ட சிதம்பரம், தேசியப் புலனாய்வு முகமைச் சட்ட விதிகள் குறித்து விரிவாக விளக்கித் தானே குறிப்பிட்ட முதல்வர்களுக்கு அடுத்த சில நாட்களில் கடிதம் எழுதப்போவதாகத் தெரிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் விதிமீறல்கள் நடப்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் என். கோபால்சாமி வேதனை தெரிவித்துள்ளார்... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|