|
| ஜம்மு - காஷ்மீர் : 7ஆவது நாளாக என்கவுண்டர் நீடிப்பு |
| ஜம்மு (ஏஜென்சி), புதன்கிழமை, 7 ஜனவரி 2009 ( 18:42 IST ) | |
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையேயான மோதல் 7 ஆவது நாளாக இன்றும் நீடித்தது.
மோதல் நடக்கும் இடம் கடினமான மலைப் பகுதி என்பதாலும், உயிரிழப்பைத் தவிர்க்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் பாதுகாப்புப் படையினர் முன்னேறி வருவதாலும் மோதல் தொடர்கிறது என்று ராணுவத் தளபதி தீபக் கபூர் இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதற்கிடையே, சுற்றி வளைக்கப்பட்டுள்ள தீவிரவாதிகள் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதைப் பார்க்கையில், அவர்கள் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஜெய்ஸ் ஈ மொஹம்மது இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கருதுவதாக என்று பிரிகேடியர் ஜெனரல் குர்தீப் சிங் மோதல் நடந்து வரும் மெந்தார் வனப்பகுதியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மோதல் நடக்கும் இடம் முழுவதும் பாறைகளும், இயற்கையான குகைகளும் நிறைந்துள்ளன. தீவிரவாதிகள் இந்தக் குகைகளுக்குள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.உயிரிழப்பைத் தவிர்க்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் பாதுகாப்புப் படையினர் மோதி வருகின்றனர் என்றார் அவர்.
இம்மோதலில் இதுவரை தீவிரவாதிகள் 6 பேரும், பாதுகாப்புப் படையினர் 3 பேரும் என 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் விதிமீறல்கள் நடப்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் என். கோபால்சாமி வேதனை தெரிவித்துள்ளார்... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|