|
| காஷ்மீர் முதல்வர் வீடு அருகே நடமாடியவர் சுட்டுக்கொலை |
| ஸ்ரீநகர் (ஏஜென்சி), புதன்கிழமை, 7 ஜனவரி 2009 ( 15:57 IST ) | |
ஜம்மு - காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா வீட்டுக்கு அருகே சுற்றித் திரிந்த நபரை, பயங்கரவாதி என்று கருதி ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.
தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள குப்கார் சாலையில் முதல்வர் உமர் அப்துல்லாவின் வீடு அமைந்துள்ளது. பலத்த பாதுகாப்புள்ள இப்பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் நடமாடிக் கொண்டிருந்தார்.
அந்த நபரை ராணுவத்தினர் எச்சரித்து அனுப்பினர். எனினும் அந்த நபர் முதல்வர் வீட்டை நோக்கிச் சென்றார். இதனால், அவர் பயங்கரவாதியாக இருக்கலாம் என்று கருதி ராணுவத்தினர் அவரை சுட்டுக் கொன்றனர்.
இதன் பிறகு நடந்த விசாரணையில் கொல்லப்பட்ட நபர் பயங்கரவாதி அல்ல என்றும், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.
இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் விதிமீறல்கள் நடப்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் என். கோபால்சாமி வேதனை தெரிவித்துள்ளார்... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|