|
| மும்பை வந்தார் பிரதிபா பாட்டீல் |
| மும்பை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 2 டிசம்பர் 2008 ( 09:29 IST ) | |
வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், முன்கூட்டியே தனது பயணத்தை முடித்துக்கொண்டு மும்பை வந்தார்.
குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், 10 நாள் அரசு முறைப்பயணமாக, வியட்நாம் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
இந்நிலையில் கடந்த வாரம் மும்பையில் பயங்கரவாதிகள் கொலைவெறி தாக்குதல் நடத்தி சுமார் 200 பேரின் உயிர்களை பறித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்ததும் கடும் கண்டனம் தெரிவித்தார் பிரதிபா பாட்டீல். உடனடியாக நாடு திரும்ப இயலாத நிலையில், அவர் தனது பயணத்தை முன்கூட்டியே முடித்துக்கொண்டு தாயகம் திரும்பினார்.
நேரடியாக மும்பை வந்த அவர், பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன. |
| |
|
|
|
|
 | | | தெனாவட்டு | | தனியாளாக ரவுடி சாம்ராஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெரிந்தும் அவனுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி... |
| |
|
|
|
|
|
|
|