|
| மத்திய அமைச்சரவை விலக வேண்டும்: பாஜக |
| மும்பை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 1 டிசம்பர் 2008 ( 10:17 IST ) | |
மும்பை தாக்குதல் சம்பவத்துக்குப் பொறுப்பேற்று சிவராஜ் பாட்டீல் ராஜினாமா செய்தால் மட்டும் போதாது. ஒட்டு மொத்த அமைச்சரவையும் பதவி விலக வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து சிவராஜ் பாட்டீல் ராஜினாமா செய்தது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கருத்து தெரிவிக்கையில், சிவராஜ் பாட்டீலின் ராஜினாமா தேர்தலுக்கான ஒரு நாடகம் என்றார்.
மும்பை தாக்குதலுக்கு தார்மீகப் பொறுப்பேற்று சிவராஜ் பாட்டீல் ராஜினாமா செய்திருப்பது மிகவும் தாமதமான நடவடிக்கை. இச்சம்பவத்திற்கு மத்திய அமைச்சரவையும் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா கருத்து தெரிவிக்கும் போது, 'உள்துறை அமைச்சரின் ராஜினாமாவால் மத்திய அரசு தனது நம்பகத் தன்மையை இழந்துவிட்டது' என்றார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|