|
| டெல்லிக்கு தீவிரவாதிகள் மிரட்டல் |
| டெல்லி (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 30 நவம்பர் 2008 ( 15:21 IST ) | |
டெல்லி விமான நிலையம், மும்பை பங்குச் சந்தை ஆகியவற்றைத் தகர்க்கப்போவதாக தீவிரவாதிகள் புதிய மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது தொடர்பான மின்னஞ்சல் மிரட்டல் கடிதம் ஒன்று குஜராத் மாநில காவல்துறைக்கு வந்துள்ளதாக, டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மும்பையில் தாஜ் ஹோட்டல் மீது தாக்குதல் நடத்திய டெக்கான் முஜாகுதீன் அமைப்பு தான் தற்போதை மிரட்டலையும் விடுத்திருப்பதாக, அந்த தகவல் கூறுகிறது.
மும்பை தாக்குதல் நடந்த மறுநாளே தீவிரவாதிகள் இந்த மிரட்டல் கடிதத்தை அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது.
எனினும் இந்த மிரட்டல் குறித்து அதிகாரபூர்வமாக எவ்வித தகவலும் வெளியாகவில்லை.
தற்போதைய புதிய மிரட்டலைத் தொடர்ந்து, டெல்லியில் விமான நிலயம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படத்தப்பட்டுள்ளன. இதேபோல் மும்பையிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|