|
| டெல்லியில் இன்று அனைத்து கட்சி கூட்டம் |
| டெல்லி (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 30 நவம்பர் 2008 ( 11:05 IST ) | |
மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலைத் தொடர்ந்து நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்துவதற்காக பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு நிலைமை, தீவிரவாதிகளை ஒடுக்க மேலும் கடுமையான சட்டங்கள் கொண்டு வருதல், மத்திய- மாநில அரசுகளுக்குப் பொதுவாக காவல்துறையில் புதிய படைப்பிரிவை (பெடரல் ஏஜென்சி) உருவாக்குதல் உள்ளிட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிகிறது.
பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்துள்ள இந்த கூட்டம், டெல்லி ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.
நாட்டில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்துக்கும் இக்கூட்டத்தில் பங்கேற்கும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முப்படை தளபதிகளுடன் ஆலோசனை: முன்னதாக மும்பை தாக்குதல் சம்பவம் முடிவடைந்ததை அடுத்து நேற்று முப்படைத் தளபதிகளுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார்.
இதில் பாதுகாப்புச் செயலர் விஜய் சிங், உள்துறை செயலாளர் மதுகர் குப்தா, ராணுவத் தலைமை தளபதி தீபக் கபூர், உளவுப்படைத் தலைவர் பி.சி. ஹால்தார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|