|
| பொடா போன்ற சட்டம் கொண்டு வரப்படாது: சிவராஜ் பாட்டீல் |
| புதுடெல்லி (ஏஜென்சி), சனிக்கிழமை, 22 நவம்பர் 2008 ( 12:24 IST ) | |
பொடா போன்ற கொடிய சட்டம் எதையும் கொண்டு வரும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்று உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
மாநில காவல்துறை, துணை ராணுவப்படை அதிகாரிகள், உளவுத்துறை ஆகிய அமைப்புகளின் தலைவர்கள், உயரதிகாரிகளின் மாநாடு புதுடெல்லியில் இன்று தொடங்கியது.
இம்மாநாட்டில் பேசிய உள்துறை அமைச்சர் சிவராஜ்பாட்டீல், 'தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்கள் அதனைச் சமாளிக்க தீவிரவாத எதிர்ப்பு சிறப்புப் படையை உருவாக்க முன் வர வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.
'விசாரணை முடியும் முன்பே தகவல்கள் கசியாமல் இருப்பதில் புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்' என்று குறிப்பிட்ட அவர், 'தீவிரவாதச் செயல்களை ஒடுக்கும் நோக்கத்துடன் பொடா போன்ற கொடிய சட்டம் எதையும் கொண்டு வரும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை' என்றார்.
இம்மாநாடு நாளை நிறைவடைக்கிறது. நிறைவு நாள் நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்றுப் பேசுகிறார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - நாடாளுமன்றம் வரும் 10ம் தேதி கூடுகிறது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|